திங்கள், 12 நவம்பர், 2012

மனைவி அன்னியருடன் ஓடிவிட்டால் மறுமணம் செய்யலாமா

கேள்வி: எனது மனைவி சில மாதங்களுக்குமுன் அன்னியருடன்
 ஓடிவிட்டால் எங்குள்ளார் எனத் தெரியவில்லை. அப்பெண்ணின்
வீட்டாருக்கும் தெரியவில்லை. அப்பெண்ணின் ஊர் ஜமாத்தினரும்
எங்களுக்குத் தெரியவில்லை என்று கூறுகின்றனர். இனி அப்பெண்
என்னிடம் திரும்புவால் என்ற நம்பிக்கை இல்லை. மறுமணம் செய்து
கொள்ள விரும்புகின்றேன், இச்சூழலில் மறுமணம் செய்துகொள்ள மார்கத்தில் அனுமதி உண்டா ?

பதில்: மேற்காணும் கேள்வி உள்ளபடி....................

ஒரு பெண் அன்னியருடன் சென்றுவிட்டால் அப்பெண்ணுடனான விவாகரத்தை ரத்துச் செய்துவிட கணவணுக்கு உரிமை உண்டு.
மறுமணம் செய்துகொள்ள தடையில்லை. மறுமணம் செய்து கொண்டால்
இஸ்லாமிய ஷரீஅத் வழிகாட்டுதல் நெறிமுறைப்படி, ஒரு மனைவிக்கு
கணவன் செய்துவர வேண்டிய கடமைகளை அல்லாஹ்வை அஞ்சி நன்கு
நிறைவேற்றி வரவேண்டும். ஒரு பெண் தன்னை விட்டும் பிரிந்து செல்ல
கணவன் காரணமாக இருந்துவிடக் கூடாது. அவ்வாறு நடந்து விட்டால் அப்பெண் செய்த பாவத்திற்கு அந்தக் கணவன் இறைவனிடம் பதில்
சொல்லியாக வேண்டும். இவ்வாறே இஸ்லாமிய ஷரீஅத் சட்ட நூல்களில்
காணப்படுகிறது.
          
                                                                                  
                                                     அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
                         ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்