ஞாயிறு, 8 ஜனவரி, 2017

அண்ணல் அஃ லா ஹஜ்ரத் நூற்றாண்டு நினைவு நிறைவுப் பெருவிழா ரபீவுல் ஆகிர் பிறை 22 (21-1-2017)











அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எதிர்வரும் ரபீவுல் ஆகிர் பிறை 22 (ஜனவரி 21) சனிக்கிழமை காலை 9.00 மணிமுதல் மாலை வரை நமது ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவில் அண்ணல் அஃ லா ஹஜ்ரத் நூற்றாண்டு நினைவு நிறைவுப் பெருவிழா நடைபெறவுள்ளது .
   அண்ணாரின் நினைவலைகளை பதிவு செய்வதுடன் , மார்க்க சேவையாற்றி மறைந்த பல்வேறு மாமேதைகளின் மாண்புகளையும் , வரலாறுகளையும் பகிர்ந்து கொண்டு உலமாக்களுக்கும் , மாணவர்களுக்கும் எழுச்சியையும் , புத்துணர்ச்சியையும்  ஏற்படுத்தப்படவுள்ளது .அரபி மதரஸாக்களின் அருமையையும் , பெருமையையும் பதிவு செய்வது முக்கிய நோக்கமாகும் .
  இப்பெருவிழாவில் ஆலிம்கள் , மத்ரஸாக்களின் பட்ட வகுப்பு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம் .
                                                                                       இங்கனம்
                                                                      முதல்வர் & நிர்வாகிகள்
                                                                          JMH - நீடூர் - நெய்வாசல் 

சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்